கோவை, பிப். 1: கோவை ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (23). இவர், நேற்று முன்தினம் தேவாங்கபேட்டை ரோட்டில் உள்ள அம்மா உணவகம் அருகே தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், அவர்களிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டனர். அவர்கள் கொடுக்க மறுத்ததால் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து அர்ஜூன் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மிரட்டி பணம் பறிக்க முயன்றது பிரபு (எ) குண்டு பிரபு (33) மற்றும் கோவை ஆர்ஜி வீதியை சேர்ந்த சந்தோஷ் (28) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.