ரயில்வே முன்பதிவு மைய வேலை நேரம் குறைப்பு

0
17

கோவை; கிறிஸ்துமஸ் பண்டிகையன்று, பயணிகள் முன்பதிவு மையங்கள், எட்டு மணி நேரம் மட்டுமே இயங்கும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சேலம் கோட்ட ரயில்வே துறையில், முன்பதிவு மையங்கள் ஒரு ‘ஷிப்ட்’ மட்டும் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 8:00 முதல், மதியம் 2:00 மணி வரை மட்டும், முன்பதிவு மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.