கோவை; தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கு.வடமதுரை கோட்டத்துக்கு உட்பட்ட ஒருசில பகுதிகளில், இரட்டைப்படை மாதத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த மின் கணக்கீடு, ஒற்றைப்படை மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் அறிக்கை:
கு.வடமதுரை கோட்டம், ஜோதிபுரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட சிவா நகர், சக்தி நகர், இளங்கோ நகர் மற்றும் பாலாஜி கார்டனில், நிர்வாக காரணங்களுக்காக, மின் கணக்கீடு இரட்டைப்படை மாதத்தில் இருந்து, ஒற்றைப்படை மாதத்துக்கு மாற்றப்படுகிறது. இதனால், வரும் ஜன., மாதத்திலும் இப்பகுதிகளில், மின் கணக்கீடு எடுக்கப்படும்.
கணக்கீடு செய்த தேதியில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இப்பகுதிகளில் அடுத்த மின் கணக்கீடு, மார்ச் மாதம் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.