பஸ் பயணத்தில் மாரடைப்பால் மரணம்

0
16

தொண்டாமுத்தூர்: கல்வீரம்பாளையம், விஜயா நகரை சேர்ந்தவர் அய்யாசாமி,52; கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். அய்யாசாமிக்கு, கடந்த ஒரு வாரமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, தனது மனைவியுடன், அரசு பஸ்சில் ஏறி, தொண்டாமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். ஓணாப்பாளையம் அருகே, அய்யாசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார்.

அவரை அரசு பஸ்சிலேயே, தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அய்யாசாமி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.