கோவை; கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில், சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நாளில், குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் 27ம் தேதி, நிதி ஆப்கே நிகட்’ (Nidhi Aapke Nikat) என்ற பெயரில் குறை தீர்ப்பு கூட்டம் நடக்க உள்ளது.
கோவை வால்பாறை செல்லாளிப்பாறை கிளப், டாடா காபி ஒர்க்ஸிலும், திருப்பூர் அனுப்பர்பாளையம் ஜூபிடர் அவென்யூ ஜூபிடர் நிட்டிங் கம்பெனி யூனிட் -2 விலும், குன்னுார் உபாசி ஹால், பிகர் ஆப் 8 ரோடு, பெட்போர்ட்டிலும் நடக்கிறது.
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் குறைகள் மற்றும் பிரச்னைகளை காலை, 10:30 முதல், 12:30 மணி வரை நேரில் முறையிடலாம்.
உறுப்பினர், ஓய்வூதியம் பெறுபவர்கள் அவர்களின் யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம்.
பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.rocbe@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் -வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.