விவசாயிகள் மகிழ்ச்சி காபி விளைச்சல் அதிகரிப்பு

0
78

வால்பாறை: வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம், 32 ஆயிரத்து 825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் காபி மட்டும் நான்காயிரத்து, 517 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தால், இந்த ஆண்டு காபி செடிகளில், பழம் முன் கூட்டியே காய்க்க துவங்கியுள்ளன.

இது குறித்து, தோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறை மலைப்பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி பயிரிடப்பட்டுள்ளது. ரொபஸ்டா, அரபிக்கா காபி வகைகள் இங்குள்ள பல்வேறு எஸ்டேட்களில் பயிரிடப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் காபி பூ பூக்கத்துவங்கிய பின், காய்கள் காய்க்கத்துவங்கும். நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை காபி அறுவடை செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு சீதோஷ்ணநிலை மாற்றத்தால், டிசம்பர் மாதம் காபி பழம் சீசன் துவங்கியுள்ளது. இருப்பினும் ஜனவரி மாதம் இறுதிக்குள் இதன் சீசன் நிறைவடையும். இவ்வாறு, தெரிவித்தனர்.