பொள்ளாச்சி தேர்தல் பிரிவு சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேரணியை சப்- கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணி பி.எஸ்.என்.எல். அலுவலகம், தபால் அலுவலகம் வழியாக வந்து சப் கடை அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகை ஏந்தி சென்றனர். இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம் தேர்தல் பிரிவு செல்வம் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.