ரூ.2 லட்சம் மதிப்பிலான டவர் உதிரிபாகம் திருட்டு

0
43

கோவை, டிச. 24: கோவையில் விவசாய நிலங்கள், தனியார் கட்டிடங்களில் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர்கள் வாடகை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல், சுக்ரவார்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் நிறுவன செல்போன் டவர் உள்ளது. இந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்தி விட்டதால், டவர் பயன்பாடின்றி கிடந்தது.

இதற்கிடையே இந்த நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர் உதிரிபாகங்கள் அடிக்கடி திருடு போவதாக நிறுவன அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார் வந்தது. அதன்பேரில், சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, ரூ.2 லட்சம் மதிப்பிலான உதிரிபாகம் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரி அர்ஜூனன் ஆர்.எஸ்.புரம் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.