மெட்டு வாவியில் ‘ சிப்காட்’ பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

0
53

கிணத்துக்கடவு:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே மெட்டுவாவியில், அதிகளவு விவசாய நிலம் உள்ளது.

தற்போது, இப்பகுதியில், 1,310 ஏக்கர் பரப்பில், ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க, ‘சர்வே’ பணிகள் நடப்பதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

‘சர்வே’ செய்யப்பட்ட பகுதிகளில், சில இடங்களில் விளைநிலம், லே – அவுட்டுகள், குடியிருப்புகள், காலியிடம் உள்ளது. அதனால், சிப்காட் தொழிற்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மெட்டுவாவி ஊராட்சி அலுவலகம் முன் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.

இதில், எம்.எல்.ஏ.,க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், சூலுார் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

சிப்காட் தொழிற் பூங்காவுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.