மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார்

0
17

அன்னுார்; அன்னுாரில் ஆய்வுக்கு வந்த கலெக்டரிடம் பொதுமக்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று அன்னுார் வட்டாரத்தில் ஆய்வு செய்தார்.

குன்னத்துராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் கலெக்டர், அத்திக்கடவு அதிகாரிகளிடம், எவ்வளவு குளங்களில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. எவ்வளவு நிலுவை. ஏன் தாமதம், எப்போது முடிப்பீர்கள்? என கேட்டார்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் நேற்று அன்னுார் வட்டாரத்தில் ஆய்வு செய்தார்.

குன்னத்துராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் கலெக்டர், அத்திக்கடவு அதிகாரிகளிடம், எவ்வளவு குளங்களில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. எவ்வளவு நிலுவை. ஏன் தாமதம், எப்போது முடிப்பீர்கள்? என கேட்டார்.

இதைத்தொடர்ந்து தர்மர் கோவில் வீதியில் உள்ள புவனேஸ்வரி நகரில் ஆய்வு செய்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் கலெக்டரிடம் ‘ஓராண்டாக இந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் 50 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியவில்லை. வீடுகளில் சுவர்கள் பலம் இழந்துவிட்டன,’ என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அதற்கு கலெக்டர், மழை நீரை பட்டா நிலத்திற்குள் கொண்டு செல்ல நாம் வற்புறுத்த முடியாது. அது மழை நீர் பாதை என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே நாம் வற்புறுத்த முடியும். எனவே மழைநீர் செல்வதற்காக நிலம் கையகப்படுத்த 10 நாட்களுக்குள் திட்டம் தயாரித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்

இதைத்தொடர்ந்து தர்மர் கோவில் வீதியில் உள்ள புவனேஸ்வரி நகரில் ஆய்வு செய்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் கலெக்டரிடம் ‘ஓராண்டாக இந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் 50 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியவில்லை. வீடுகளில் சுவர்கள் பலம் இழந்துவிட்டன,’ என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அதற்கு கலெக்டர், மழை நீரை பட்டா நிலத்திற்குள் கொண்டு செல்ல நாம் வற்புறுத்த முடியாது. அது மழை நீர் பாதை என குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே நாம் வற்புறுத்த முடியும். எனவே மழைநீர் செல்வதற்காக நிலம் கையகப்படுத்த 10 நாட்களுக்குள் திட்டம் தயாரித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்

செவிலியர்கள் திணறல்

குன்னத்தூராம் பாளையம் துணை சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது அங்கிருந்த செவிலியர்கள், கலெக்டரிடம், ‘ 70 சதவீத பிரசவம் அரசு மருத்துவமனையிலும், 30 சதவீதம் தனியார் மருத்துவமனையிலும் நடக்கிறது,’ என்று கூறினர்.இதுகுறித்த ஆவணங்களை கலெக்டர் பெற்று அதை ஆய்வு செய்தபோது, தனியார் மருத்துவமனையில் தான் அதிக பிரசவம் நடந்தது. அரசு மருத்துவமனையில் குறைவான பிரசவமே நடந்தது தெரிய வந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் மீண்டும் செவிலியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது பதில் அளிக்க முடியாமல் செவிலியர்கள் திணறினர்.