மதுவில் விஷம் கலந்து குடித்தவர் தற்கொலை

0
37

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்

கிணத்துக்கடவு, பாலார்பதியை சேர்ந்தவர் வல்லரசு, 40, இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சிக்கலாம்பாளையம் பகுதியில் மளிகை கடை வைத்திருந்தார். அப்போது, இவருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.

தொடர்ந்து, கோவையில் உள்ள மளிகை கடையில், மனைவி பேபி ஷாலினியுடன் வேலை செய்து வந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன், இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து, பேபி ஷாலினி முத்துகவுண்டனூரில் உள்ள அம்மா வீட்டுக்கு சென்றார். வல்லரசு பாலார்பதியில் உள்ள அவரது அம்மா விட்டுக்கு சென்றார்.

இந்நிலையில், வல்லரசு சிக்கலாம்பாளையம் அருகே மரத்தடியில் அதிகளவு மது அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.