கோவை,: ”உலகின் ‘சிப்’ இன்ஜினியர்களில், 20 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்கள் இந்தியா திரும்பினால், உலகின் முதன்மை பொருளாதார நாடாக, நம் நாடு மாறும்,” என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை, ரத்தினம் டெக்னோ பார்க் கல்லூரி அரங்கில், ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் நடந்த, ‘பிளாசம் 2025’ இரண்டு நாள் மாவட்ட மாநாட்டில், அண்ணாமலை பேசியதாவது:
புவிசார் அரசியல், ஒவ்வொரு தனிமனிதரையும் பாதிக்கும். டாலர், சிப், ஏ.ஐ., இவை தற்போதைய புவிசார் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
சீனா, சிப் உற்பத்திக்குத் தேவையான சில அரிதான கனிமவளங்களில், 70 சதவீதத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி, சீனா நகர்ந்தால், இந்தியாவும் நகரும். பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா, சீனாவின் நடவடிக்கைகளுக்கு மத்தியில், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி தன்னை முன்னிறுத்திக் கொள்ளப்போகிறது என்பதுதான், புவி சார் அரசியல்.
சிப் தயாரிப்பில் தைவான், அதை உற்பத்தி செய்யும் இயந்திர தயாரிப்பில் நெதர்லாந்து, ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் சீனா, இவை முன்னணியில் இருக்கலாம்.
ஆனால், உலகின் ‘சிப்’ இன்ஜினியர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள். அவர்கள் இந்தியா திரும்பினால், உலகின் முதன்மை பொருளாதார நாடாக, நம் நாடு மாறும்.
இவ்வாறு, அவர் பேசினா