கோவை, டிச. 27: கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் வரும் 30ம்தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு நடக்கிறது. மேயர் ரங்கநாயகி தலைமை தாங்குகிறார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில், மாநகரில் 100 வார்டுகளிலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே, அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.