சொத்து வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

0
6

கோவை: கோவை மாநகராட்சியில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024-25 நிதியாண்டில், 473.77 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்; நேற்று வரை, 398.20 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இன்னும், 75.57 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியிருக்கிறது. இத்தொகையை வசூலிக்க, மாநகராட்சி பகுதியில் இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

கிழக்கு மண்டலம்: வலியாம்பாளையம் ரேஷன் கடை, அசோக் நகர் பிள்ளையார் கோவில், காளப்பட்டி நேரு நகர் பஸ் ஸ்டாப் அருகில், பூங்கா நகர் விநாயகர் கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி மாநகராட்சி பள்ளி, ஒண்டிப்புதுார் சுங்கம் மைதானம்.

மேற்கு மண்டலம்: கவுண்டம்பாளையம் பிரபு நகர் அங்கன்வாடி மையம், சீரநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவில் மைதானம்.

வடக்கு மண்டலம்: சுப்பிரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், மணியகாரம்பாளையம் அம்மா உணவகம், காந்தி மாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, காமதேனு நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், ஜனதா நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி.

தெற்கு மண்டலம்: குனியமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சுண்டக்காமுத்துார் சுகாதார ஆய்வாளர் அலுவலகம், பிள்ளையார்புரம் ஹவுசிங் யூனிட் பேஸ்-2, போத்தனுார் செங்கோட்டையா காலனி.

மத்திய மண்டலம்: சங்கனுார் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, பெருமாள் கோவில் வீதி நியூ கலெக்சன் சென்டர், கெம்பட்டி காலனி ஒக்கிலியர் காலனி ஸ்கூல் ஆகிய இடங்களில் இன்று காலை, 9:00 முதல் மாலை, 6:00 மணி வரை வரியினங்களை செலுத்தலாம்.