கோவை : கோநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் கூடுதல் எஸ்.பி., பெருமாள் சாமி நேற்று சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். கொலை, கொள்ளை சம்பவத்தில் போதுமான ஆதாரங்கள் கிடைக்காத நிலையில் பல்வேறு தகவல்களை திரட்ட, போலீசார் தற்போது வரை 240க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, வீர பெருமாள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார், 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக கண்ணன் மற்றும் ஐயப்பன் பணியாற்றினர் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மற்றொரு முதன்மை பாதுகாப்பு அதிகாரியான ஈரோடு, பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., பெருமாள்சாமி நேற்று காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜர் ஆனார். போலீசார் அவரிடம் சுமார் 1.30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, வீர பெருமாள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார், 2 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக கண்ணன் மற்றும் ஐயப்பன் பணியாற்றினர் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மற்றொரு முதன்மை பாதுகாப்பு அதிகாரியான ஈரோடு, பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் எஸ்.பி., பெருமாள்சாமி நேற்று காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜர் ஆனார். போலீசார் அவரிடம் சுமார் 1.30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.