சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை; விடுபட்டோருக்கு வழங்க கணக்கெடுப்பு

0
30

கோவை; கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளை மாநகராட்சி நிர்வாகம் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்குகிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், மார்க்கெட்டுகள், பஸ் ஸ்டாண்ட்டுகள், சாலையோரங்கள், கோவில்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களில் சாலையோர வியாபாரிகள் சிறிய அளவில் கடைகள் பரப்பி, வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் தவிர, தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்கின்றனர்.

இதுவரை, 14 ஆயிரத்து, 438 வியாபாரிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இன்னும், 2,400 பேருக்கு வழங்க வேண்டியிருக்கிறது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், மார்க்கெட்டுகள், பஸ் ஸ்டாண்ட்டுகள், சாலையோரங்கள், கோவில்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களில் சாலையோர வியாபாரிகள் சிறிய அளவில் கடைகள் பரப்பி, வியாபாரம் செய்கின்றனர். இவர்கள் தவிர, தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்கின்றனர்.

இதுவரை, 14 ஆயிரத்து, 438 வியாபாரிகள் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இன்னும், 2,400 பேருக்கு வழங்க வேண்டியிருக்கிறது.

!

மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட ஏஜன்சியினர், வீதி வீதியாக வந்து, விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து வருகின்றனர். அவர்களிடம் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் வழங்க வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது; இலவசமாக பதிவு செய்து, அடையாள அட்டை வழங்கப்படும்.

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சாலையோர வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும். வங்கிகள் மூலம் கடனுதவிக்கு பரிந்துரைக்கப்படும். முதல் தவணை ரூ.10 ஆயிரம், இரண்டாவது தவணை ரூ.20 ஆயிரம், மூன்றாவது தவணை ரூ.50 ஆயிரம் வரை கடனுதவி அளிக்கப்படும். தவணை தொகையை சரியாக திருப்பிச் செலுத்தினால், அடுத்தடுத்த தவணைகளில் கடனுதவி வழங்கப்படும்’ என்றனர்

சாலையோர வியாபாரிகள் கூறுகையில், ‘ஐந்தாண்டுக்கு ஒரு முறை வணிகக்குழு தேர்தல் நடத்த வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை வணிகக்குழு கூட்டம் கூட்ட வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி, போதிய இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடன் கொடுக்க வேண்டும்’ என்றனர்.
.