கோவை; கோவை விழாவை முன்னிட்டு, கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பை வழங்கப்பட்டது.
கோவை விழாவின் 17வது பதிப்பாக, பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால் மற்றும் பாட்மின்டன் போட்டிகள், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
வாலிபால் போட்டியில், 22 அணிகளும், பாட்மின்டன் போட்டியில், 20 அணிகளும் பங்கேற்றன. வாலிபால் இறுதிப் போட்டியில், கற்பகம் பல்கலை மற்றும் ரத்தினம் கல்லுாரி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது.
பாட்மின்டன் போட்டியில், கே.பி.ஆர்., மற்றும் கே.சி.டி., கல்லுாரி அணிகள் மோதின. இதில், கே.சி.டி., அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பை, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.