கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்

0
10

கோவை; கோவை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு முதல் நாளில், நான்கு குழந்தைகள் பிறந்தன.

புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று களைகட்டியது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், நேற்று முன் தினம் நள்ளிரவு 12:00 முதல், நேற்று மாலை வரை 4 குழந்தைகள் பிறந்துள்ளனர்.

டீன் நிர்மலா கூறுகையில், ”புத்தாண்டு முதல் தினத்தில், மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு பேர் பிறந்துள்ளனர். குழந்தைகளும், தாய்மார்களும் நலமுடன் உள்ளனர்,” என்றார்.