குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி

0
4

காரமடை,மார்ச்20: மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(43).தனியார் நிறுவனத்தில் சிஎன்சி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை காரமடையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் கோவை – மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் மயானம் அருகே நடந்து சென்ற போது அருகில் இருந்த ஓடையில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.