கோவை; தனியார் பஸ்சில் பாட்டின் சத்தத்தை குறைக்க சொன்ன, வக்கீலுடன் தகராறில் ஈடுபட்ட பஸ் டிரைவர் உள்ளிட்ட மூவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை, என்.ஜி.ஜி.ஓ., காலனி செங்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 45; சென்னை உயர் நீதிமன்ற வக்கீல். இவர் நேற்று முன்தினம், போத்தனுாரில் இருந்து துடியலுாருக்கு தனியார் பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் சினிமா பாட்டு சத்தம், காதை பிளந்துள்ளது. ராஜமாணிக்கம் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு, பஸ் டிரைவரிடம் கேட்டார். அவர் மறுத்து விட்டார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த பஸ்சில் இருந்த இருவர், பஸ் டிரைவருக்கு ஆதரவாக ராஜமாணிக்கத்தை தகாத வார்த்தைகளால் திட்டினர்.
ராஜமாணிக்கம், துடியலுார் போலீசில் பஸ் பதிவு எண்ணுடன் புகார் அளித்தார். போலீசார் பஸ் டிரைவர் உட்பட மூவர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றன